இயேசு யார்? கிறிஸ்துயார்? 01 நுழைவாயில்

நுழைவாயில் பைபிள் தொன்ம களம்

பைபிள் தொன்மக் கதைகள் இஸ்ரேல் எனும் சிறு நாட்டை சுற்றியே முக்கியத்துவம் பெற்றதோ, அதனுள் ஜெருசலேம் (சீயோன் மலை) மட்டுமே, அதுவே  யாவே கடவுள் வீடு[i] எனவும் கூறுகிறது. கதைப்படி ஏசு யூதனாய் பிறந்து யூத மதத் தொன்மக் கட்டளைபடி இஸ்ரேலின் தெய்வம் யாவே இருக்கும் ஒரே இடமான[ii] ஜெருசலேம் ஆலயம் வந்து ஆடு கொலைபலி தரும் பஸ்கா பண்டிகை போது ரோமன் கவர்னரின் படைத் தலைவரால் கைது செய்யப்பட்டு, ரோமன் மரணதண்டனை தூக்குமரத்தில் தொங்கும் மரண தண்டனையில் கொல்லப்பட்டார்.

எபிரேய விவிலியத்தில் ஜெருசலேமின் முக்கியம் பற்றிய வசனம் காண்போம்.[iii]

சங்கீத: 48 :1 ஆண்டவர் மாண்பு மிக்கவர்; நம் கடவுளின் நகரில், அவரது திருமலையில் மிகுந்த புகழுக்கு உரியவர்.

2 அழகும் உயரமுமாய் தொலை வடக்கில் திகழும் சீயோன் மலை அனைத்து உலகிற்கும் மகிழ்ச்சியால் இலங்குகின்றது; மாவேந்தரின் நகரும் அதுவே. 3 அதன் அரண்மனைகளில் கடவுள் வீற்றிருந்து, தம்மையே அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார்.

யூதருக்காக மட்டும் என்ற ஏசுவை நேரில் பார்க்காது ஆனால் யூதர் அல்லாதவர்களிடம் கிறிஸ்துவத்தை பரப்பி அதை தொழிலாய் காசு சம்பாதித்த தூய.பவுல் பழைய ஏற்பாடு வசனம் வழியே கிறிஸ்து சீயோனிலிருந்து வருபவர் யாக்கோபின் வாரிசுகளினுள் உள்ள கெட்டவைகளை நீக்குவார்[iv]  என்றார்.

கலிலேயரான ஏசு ஜெருசலேம் செல்லும் வழியில் சமாரிய கெர்சிம் மலையருகே ஒரு சமாரியப் பெண்ணோடான உரையாடலில், அப்பெண் நம் முன்னோர்கள் வழக்கப்படி இந்த கெர்சிம் மலையில் சமாரியர் கர்த்தரை வணங்குகிறோம், யூதர்கள் ஜெருசலேமில் வணங்க வேண்டும் என்கிறீரார்கள் என்றிட ஏசு சமாரியர்கள் அறியாததை வணங்குவதாய் இழிவாய் பேசினார்[v].

யூதர்களின் மிக முக்கியமான ஜெருசலேம் சீயோன் எப்படி எப்போது யூதர் கீழ் வந்தது?

பழைய ஏற்பாடுபடி எபிரேயர்கள் அன்னியர்கள், வந்தேறிகள்[vi], கல்தேயர் தேச ஆபிரகாம் வாரிசுகள், எகிப்திலிருந்து வந்து மண்ணின் மைந்தர்களை இனப் படுகொலை- இன அழிப்பு செய்து இஸ்ரேலில் குடியேறியவர்கள்[vii]. அந்தப் படுகொலைகளை இன அழிப்பை சொல்வது யோசுவா நூல், அவர் காலத்திலேயே ஜெருசலேமும் எபிரேயர் கீழ் வந்ததாம்.

யூதாஜெருசலேமில் வாழ்ந்தவர்கள் எமோரியர்கள், வென்றது யோசுவா[viii]; இவர் காலத்திற்கு 200 வருடம் பின்பு கானானியர்கள் ஆள இப்போது தான் வென்றனர். ஜெருசலேமில் வாழ்ந்தவர் கானானியர்கள், வென்றது   யூதா கோத்திர மனிதர்கள்[ix] இல்லை மேலும் 200 வருடம் பின்பு ஜெருசலேமில் வாழ்ந்தவர் எபூசியர்கள் வென்றது தாவீது ராஜா[x].

தாவீது ராஜா அவர் மகன் சாலமோன் ஜெருசலேமில் செல்வ செழிப்பு செய்திகள்

தாவீது ராஜா இஸ்ரேலின் கடவுளுக்கு ஆலயம் கட்ட 3,750 டன் தங்கம்,[xi]  37,500 டன் வெள்ளி, நிறுத்துv பார்க்க முடியாத அளவிற்கு வெண்கலமும் இரும்பும், மரமும் கற்களும் என எல்லாம் சேர்த்து தன் மகன் சாலமோன் கட்ட கொடுத்தாராம். இவரைவிடவும் சாலமோன் மேலும் பல வெற்றி பெற தங்கம் வெள்ளி[xii] கொட்டியதாம், வெள்ளி தெருவில் உள்ள கல் போலேவாம் எனக் கதை  சொல்கிறது.

தாவீது ராஜா ஒரு சென்சஸ் எடுக்க யூதேயாவில் 5 லட்சம், இஸ்ரேலில் 14 லட்சம் போர் வீரர்கள் இருந்தார்களாம், இதிலும் 2 கோத்திரம் கணக்கில் எடுக்காமல், அதாவது 14+ 2 கோத்திரம் + போரிட முடியாத மற்ற ஆண்கள் (ஊனமுற்றோர்  போலே) அதாவது நாம் 20 லட்சம் எனக் கொண்டால் (ஒரு குடும்பம் 5 பேர் மனைவி, 2 குழந்தை பெற்றோர்) எனில்  யூதேயா -இஸ்ரேலில் தாவீது காலத்தில் மக்கள் தொகை கிட்டத் தட்ட ஒரு கோடி என்கிறது கதை.

இந்த நாட்டில் சாலமோன் ராஜா இஸ்ரேஇலின் கடவுள் சொன்னபடி உருவத்தில் ஆலயம் கட்டினார், அதைத் தான் ஏசு அப்பெண்ணிடம் யூதர் அறிந்ததை வழிபடுவது என்றது.

சமாரியர் யார்?

சமாரியா என்பது இஸ்ரேலிற்கும் யூதேயாவிற்கும் இடைப்பட்ட பகுதி, பைபிள் கதைப்படி 12 கோத்திரங்களில் பிரிக்கப்பட்ட எபிரேயர் தான்.

சமாரியர் யூதரில் ஒரு பிரிவினர். ஆனால் போரில் கிரேக்கரோடு இணைந்தனர் என அரசியல் ரீதியில் ஒதுக்கினர். சமாரியா என்பது இஸ்ரேலிற்கும் யூதேயாவிற்கும் இடைப்பட்ட பகுதி, பைபிள் கதைப்படி 12 கோத்திரங்களில் பிரிக்கப்பட்ட எபிரேயர் தான், இவர்கள் கிரேக்கள் யூதேயாவில் ஜெருசலேம் கர்த்தர் ஆலயத்தை  காலத்தில்   கெர்சிம் மலை ஜூபிடர் ஏசு ஜெருசலேம் ஆலய மறு அற்பணிப்பு பண்டிகக்கு வந்தார் என்கிறது, இது பொமு167ல் கிரேக்க மன்னன் அந்தியோச்சு யாவே கர்த்தரின் ஜெருசலேம் ஆலயத்தில் கிரெக்க ஒலிம்பச்[xiii] கடவுள் சிலையும், கெர்சிம் மலை யாவே ஆலயத்தில் ஜூபிடர் கடவுள் சிலையும் வைத்தனர் என்கிறது, அதை நிக்கி யூதர் வசம் வந்ததே  இப்பண்டிகை. இதன்பின் யூதா ஹிர்கானஸ் எனும் மன்னன் போரில் சமாரியர் யாவே கர்த்தர் ஆலயம் அழிக்கப்பட்டது யூதர்களால் பொமு110ல். அதன் பின் எபிரேயர்கள் சமாரியா செல்லக் கூடாது, சமாரியர் ஜெருசலேம் வரக்க் கூடாது.

சமாரியர் யூதரிடமிருந்து பிரிந்தபோது, பழைய ஏற்பாட்டில் நியாயப் பிரமாணங்கள் எனப்படும் முத 5 நூல்கள் மட்டுமே உருவாகியிருந்தமையால், சட்டங்கள் எனும் டோரா(தௌராத்) மட்டுமே சமாரிய விவிலியம்.

தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் தெளிவாக உரைப்பது; ஜெருசலேம் 300 -400 குடும்பம் மட்டுமே கொண்ட மிகச் சறிய கிராமம், சாலமன் காலத்திற்கு 200 வருடங்கள் கழித்தும், ஆனாலும் நாம் பைபிள் கதைகளைப் பார்ப்போம்

யூத விவிலியம் 3 பகுதிகள் (டனாக்-“Tanakh“ )என்பதில் தோரா, தீர்க்கர், எழுத்துக்கள் (கேதுபிம்)  இதில் சமாரியர் பிரிவின்போது தோரா  மட்டுமே உருவாகியிருந்தது.  சுவிசேஷங்கள் எழுதி முடிக்கும் வரையிலும்(ஏசு காலம் தாண்டி), கேதுபீம் இணைக்கப் படவில்லை. ஏசு பழைய ஏற்பாட்டை சட்டங்களும் தீர்க்கர்களும் என 10க்கும் மேற்பட்ட முறை சொல்கிறார்.

 சமாரிய பைபிளில் மோசேயின் நியாய்ப் பிரமாணங்கள் மட்டுமே; அதில் இஸ்ரேலின் எல்லை  கடவுல் யாவே – கர்த்தர் தான் இருக்கும் இடம்- ஆலயம் இடம் எனக் காட்டிய இடம் கெர்சிம் மலை தான்.

யூதர்களின் மொழியான எபிரேயம் நாகரீக வளர்ச்சியற்ற எபிரேயர் வசம் உயிர் எழுத்து இல்லாமல் இருந்தது, பொகா 800க்கு பின் உயிர் எழுத்து சேர்க்கப்பட; பழைய ஏடுகள் அனைத்தும் அழித்து இன்றுள்ள வடிவு மெசோடரிக் பைபிள், இவற்றின் மிகப் பழமையானது 10ம் நூற்றாண்டினது தான், ஆயினும் யூதர்களும், கிறிஸ்துவ சர்ச்சும் சமாரிய பைபிள் மாற்றப்பட்டது எனப் பொய்யை பரப்பினர்.

ஏசு சீடர்களிடம் யூதர்கள் அல்லாதவர்களிடம் செல்லாதே, சமாரியர் ஊர்கள் செல்லாதே, என்றார், யூதரல்லாத கிரேக்க பெண்ணிடம் யூதர் அல்லாதவர்கள் நாய்கள் என இனவெறியொடு கூறி, என் பணி இஸ்ரேலியருக்கு மட்டும் என்றார், மேலும் யூதர் அல்லாதவர்களை பன்றி எனவும் மலைப் பொழிவில் பேசியவர், தன் இயக்கம் முழுக்க யூதர் அல்லாதவர் வாழும் பகுதிகளில் நுழையவே இல்லை என பைபிள் அறிஞர்கள் ஆய்வு உறுதிப் படுத்தியதை மழுப்பலாளர் ஜோஷ் மெக்டவல்[xiv] காட்டியுள்ளார்.

ஏசு வாழ்வில் ஒரு சம்பவம் கலிலேயவில் இயஙகியவர் ஜெருசலேம் வரும் வழியில் சமாரிய கெர்சிம் மலை அருகில் ஒரு சமாரிய பெண்ணிடம் குடிநீர் பெற்ற பின்[xv] உரையாடலில் — நம் முன்னோர் வழியில் சமாரியர் யாவே கடவுளை( கர்த்தர்) கெர்சிம் மலையில் வணங்கி கொலை பலி தருகிறோம், யூதர்கள் ஜெரசலேமில் என்கிறீர்கள் என்றிட, சமாரியர் அறியாததை வழிபடுவதாய் ஏசு சொல்வது ஜெருசலேம் முக்கியம் என உறுதிப் படுத்தி சொல்வார்.

ஏசு மறுஅர்ப்பணிப்பு பண்டிகைக்கு ஜெருசலேமில்

யோவான் 10: 22 அது மழைக் காலமாயிருந்தது. எருசலேமில் தேவாலய மறு அர்ப்பணிப்பு  பண்டிகை வந்தது. 23 இயேசு தேவாலயத்தில் சாலமோனின் மண்டபத்திலே இருந்தார்.

இச்ரேல் யூதேயாவினை ஆக்கிரமித போது இஸ்ரேலின் கடவுள் யாவேயின்  ஜெருசலேம் ஆலய்ட்த்தை கிரேகா ஒலிம்பஸ் கடவுல் சிலையையும், கெர்சிம் மலை கர்த்தர் ஆலயத்தை   கிரேகா ஜூபிடர் ஒலிம்பஸ் கடவுல் சிலையையும்ல் வைத்ததை எதிர்த்து யூதர் போராடி வெற்றி பெற்று ஜெருசலேம் ஆலயத்தை யூத நம்பிக்கைகள்படி சுத்தி செய்து  மறுஅர்ப்பணிப்பு நடத்திய நினைவு  பண்டிகை, இதற்கு ஏசு வந்தார் என்கிறது.

2 மக்கபேயர் 6:2 மேலும் எருசலேமில் இருந்த கோவிலைத் தீட்டுப்படுத்தி அதற்கு “ஒலிம்பு மலைச் சேயுவின் கோவில்” எனப் பெயரிடவும், கெரிசிமில் …. இருந்த கோவிலை, “அன்னியர்களின் நண்பர் சேயுவின் கோவில்” என அழைக்கவும் அவனைப் பணித்தான்

இஸ்ரேலின் தொல்லியல் ஆய்வு உண்மைகள்

எகிப்திலும், இஸ்ரேல் சிரியா என பைபிள் கதைகள் சொல்லும் அனைத்து இடங்களிலும்

1948ல் கிடைத்த சாக்கடல் சுருள்கள் பொமு 100 வாக்கினதில் சமாரிய பைபிள் தான் சரியானது என நிருபித்து உள்ளது.

உபாகமம் 11: 29 “உங்களின் சுதந்திர தேசத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை வழிநடத்திச் செல்வார். நீங்கள் விரைவில் அந்த தேசத்தில் வாழ்ப்போகிறீர்கள். அந்த நேரத்தில் கெரிசீம் மலையின் உச்சிக்கு நீங்கள் செல்ல வேண்டும். அங்கிருந்து ஜனங்களுக்கு ஆசீர்வாதங்களைக் கூறுங்கள்.

உபாகமம் 27: 12 “யோர்தான் ஆற்றை நீங்கள் கடந்து போனபிறகு, ஜனங்களுக்குரிய ஆசீர்வாதங்களை வாசிக்க சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் ஆகியோரின் கோத்திரங்கள் கெரிசீம் மலையின் மீது நிற்பார்கள்.

Robert J. Bull, The Excavations of Tell er Ras

A more substantial archaeological survey was undertaken in the middle of the 20th century, while the site was in the possession of Jordan, in the region of the mountain known as Tel el-Ras, situated on the northernmost peak at the end of the northern ridge. This excavation, which continued under Israel’s jurisdiction, uncovered Corinthian columns, a large rectangular platform (65m by 44m) surrounded by 2m thick and 9m high walls, and an 8m wide staircase leading down from the platform to a marbled esplanade.[30] The complex also has a series of cisterns in which Late Roman ceramics were found. These discoveries, now named “Structure A”, have been dated to the time of Hadrian, due to numismatics and external literary evidence, and are believed to be a temple dedicated to Zeus.

Underneath these remains were found a large stone structure built on top of the bedrock. This structure, now known as “Structure B”, nearly half cubic (21m by 20m in width and length, and 8.5m high), consists almost entirely of unhewn limestone slabs, fitted together without any binding material, and has no internal rooms or dividing walls. The structure was surrounded by a courtyard similar to the platform above it (being 60m by 40m in size with 1.5m thick walls), and was dated to during or before the Hellenic era by ceramics found in a cistern cut into the bedrock at the northern side. The excavating archaeologist considered “Structure B” to be the altar built by the Samaritans in the 5th or 6th century BCE.

1 இராஜாக்கள் 14:28 25 ரெகொபெயாம் அரசனான ஐந்தாம் ஆண்டில், எகிப்தின் அரசனான சீஷாக் எருசலேம் மீது படையெடுத்தான். 26 அவன் கர்த்தருடைய ஆலயத்திலிருந்த பொக்கிஷங்களையும் அரண்மனையிலுள்ள செல்வங்களையும் சூறையிட்டான். சாலமோன் செய்து வைத்த பொற்கேடயங்கள் எடுத்துக்கொண்டான்.

25ரெகபெயாம் ஆட்சி செய்த ஐந்தாம் ஆண்டில் எகிப்தின் மன்னனாகிய சீசாக்கு எருசலேமின் மீது படையெடுத்து வந்தான்.26ஆண்டவரது இல்லத்தின் செல்வங்களையும் அரசனது அரண்மனையின் செல்வங்களையும் சாலமோன் செய்து வைத்த பொற்கேடயங்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்துக் கொண்டு போனான்.

உபாகமம் 11: 29 “உங்களின் சுதந்திர தேசத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை வழிநடத்திச் செல்வார். நீங்கள் விரைவில் அந்த தேசத்தில் வாழ்ப்போகிறீர்கள். அந்த நேரத்தில் கெரிசீம் மலையின் உச்சிக்கு நீங்கள் செல்ல வேண்டும். அங்கிருந்து ஜனங்களுக்கு ஆசீர்வாதங்களைக் கூறுங்கள். பின்பு ஏபால் மலையின் உச்சிக்குச் செல்லவேண்டும். அங்கிருந்து ஜனங்களுக்கு சாபங்களைக் கூற வேண்டும். 30 இந்த மலைகள் யோர்தான் நதியின் மறுபக்கத்தில் கானானியர் குடியிருக்கின்ற நாட்டில் உள்ளன. இந்த மலைகள் மேற்கு நோக்கி ஓக் மரங்களுக்கு அதிக தொலைவில் இல்லாமல் கில்காலுக்கு எதிரான மோரே என்னும் சமவெளிக்கு அருகே இருக்கின்றன.

13 ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி ஆகியோரின் கோத்திரங்கள் ஏபால் மலைமீது நின்று சாபத்தை வாசிப்பார்கள்.

யோசுவா 8: 30 அப்போது யோசுவா, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை ஏபால் மலைமீது கட்டினான். 31 இஸ்ரவேலின் ஜனங்களுக்குப் பலிபீடத்தை எப்படிக் கட்டுவதென்று கர்த்தருடைய தாசனான மோசே கூறியிருந்தான்.

உபாகமம் 20: 16 “உங்கள் தேவனாகிய கர்த்தர், உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளப் போகிற நகரங்களில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் கொன்றுவிட வேண்டும். 17 அங்குள்ள ஜனங்கள் இனங்களான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியவற்றை முழுமையாக அழித்துவிட வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் இதைச் செய்யக் கட்டளையிட்டுள்ளார்.

யோசுவா 6:21 எரிகோ நகரம்-21 அங்குள்ள அனைத்தையும், அங்கு வாழ்ந்த உயிரினங்களையும் இஸ்ரவேல் ஜனங்கள் அழித்தனர். அவர்கள் இளைஞரும் முதியோருமாகிய ஆண்களையும், இளைஞரும் முதியோருமாகிய பெண்களையும், ஆடுமாடுகளையும், கழுதைகளையும் கொன்றனர்.

யோசுவா10:29 அவர்கள் லிப்னா என்னும் நகருக்குச் சென்று, அந்நகரத்தைத் தாக்கினார்கள்.  30 அந்நகரத்தையும் அதன் அரசனையும் தோற்கடிப்பதற்கு கர்த்தர் இஸ்ரவேலரை அனுமதித்தார். அந்நகரில் இருந்த ஒவ்வொருவரையும் இஸ்ரவேல் ஜனங்கள் கொன்றனர். யாரும் உயிரோடு விடப்படவில்லை. இஸ்ரவேல் ஜனங்கள் எரிகோவின் அரசனுக்குச் செய்தபடியே லிப்னாவின் அரசனுக்கும் செய்தனர்.

யோசுவா24: 13 ‘கர்த்தராகிய, நான் அத்தேசத்தை உங்களுக்குக் கொடுத்தேன்! நீங்கள் அத்தேசத்தைப் பெறுவதற்கென்று உழைக்கவில்லை! நீங்கள் அந்நகரங்களை கட்டவில்லை! ஆனால் இப்போது அத்தேசத்திலும், அந்நகரங்களிலும் சுகமாக வாழ்கிறீர்கள். திராட்சை செடிகளும், ஒலிவ மரங்களுமுள்ள தோட்டங்கள் உங்களுக்கு இருக்கின்றன. ஆனால் அத்தோட்டங்களை நீங்கள் நாட்டவில்லை.’”

1நாளாகமம்11: 4 பின்பு தாவீதும் இஸ்ரயேலர் அனைவரும் எருசலேமுக்குச் சென்றனர். அது அந்நாட்களில் எபூசு என்று அழைக்கப்பட்டது: எபூசியர் அங்கே அப்பகுதியில் வாழ்ந்து வந்தனர்.5 எபூசுவாழ் மக்கள் தாவீதை நோக்கி: நீர் இங்கு நுழையவே முடியாது என்றனர்: ஆயினும் தாவீது சீயோன் கோட்டையைக் கைப்பற்றினார். அதுவே ‘தாவீதின் நகர்’ ஆயிற்று.6 தாவீது, எபூசியரை முதலில் வெட்டி வீழ்த்துபவன் படைத்தலைவனும் தளபதியுமாய் இருப்பான் என்று அறிவித்திருந்தார். செரூயாவின் மகன் யோவாபு முதலில் உட்புகுந்தார். எனவே, அவர் படைத்தலைவர் ஆனார்.7 தாவீது அக்கோட்டைக்குள் வாழ்ந்ததன் காரணமாக அது ‘தாவீதின் நகர்’ என்று அழைக்கப்பட்டது.8 அவர் கிழக்கிலிருந்த பள்ளத்தை நிரப்பி நகரைச் சற்றிலும் மதில் எழுப்பினார்: யோவாபு நகரின் ஏனைய பகுதிகளைப் பழுது பார்த்தார்.9 படைகளின் ஆண்டவர் தாவீதோடு இருந்ததால், தாவீதின் புகழ் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே வந்தது.

யூதர்கள் யார்? பழைய ஏற்பாடு அனைத்தும் புழுத்துப்போன மோசடிகதைகள்.

யோசுவா காலம் – நியாயாதிபதிகள் காலம்- தாவீது காலம் இடையே சில நூற்றாண்டு இடைவெளி உண்டு.

வாழ்ந்தவர் எமோரியரா? கானானியரா? எபூசியரா?

ஜெருசலேமில் சாலமோன் கட்டியதான தேவாலயமோ, ஏன் எஸ்ரா நெகேமியா காலத்து தேவாலயம் என்பதிலிருந்து புதைபொருள் அகழ்வாராய்ச்சியில் ஒரு செங்கல் கூடக் கிடைக்கவில்லை.

ஆனால் ஜெருசலேமில் அப்போது வாழ்ந்த மக்கள் தொகை 1000 பேருக்கும் குறைவே என இஸ்ரேலின் டெல்அவிவ் பல்கலைகழக ஆசிரியர் கட்டுரையின் சில பகுதிகள்.

PERSIAN PERIOD FINDS FROM JERUSALEM: FACTS ANDINTERPRETATIONS –ODED LIPSCHITS; INSTITUTE OF ARCHAEOLOGY, TEL AVIV UNIVERSITY.

http://www.jhsonline.org/Articles/article_122.pdf

On the one hand, Zwickel (2008: 216–217), mainly on the basis of the descriptions and lists in Nehemiah, estimated that the population of the city before the days of Nehemiah was about 200 people and afterwards about 400 or 600 people.3 Finkelstein (2008: 501– 507), on the other hand, expressed a similar view, though rooted in the archaeological data. According to Finkelstein, only some parts of the Southeastern Hill of Jerusalem were populated in this period, leading him to conclude that the settled area consisted of c. 20–25 dunam. According to his calculations, the population in the city during Nehemiah’s period was about 400 people, including women and children (i.e., about 100 men).

The final conclusion is

The settled area of Jerusalem during the Persian period included the 28–30 dunams of the City of David plus the 20 dunams of the Ophel, which altogether amounts to about 50 dunams. Even

if parts of the Ophel hill were built up with public buildings, and only part of it was settled with private houses, this area should be included in the settled area of Jerusalem during the Persian and

Early Hellenistic periods. Calculating the population of Jerusalem according to the lower coefficient of 20 people per one built-up dunam brings the population estimate to about 1000 people;; and  according to the higher coefficient of 25 people per one built-up dunam to about 1,250 people. This population estimate is very close to the accepted estimations in research in the last years – those of Carter (1999: 288) and Lipschits (2005: 271;; 2006: 32;;) –of about 60 dunams and 1,250–1,500 people respectively, or that of Geva (2007b: 56–57) of a settled area of 60 dunams and population

estimate of about 1,000 people.

Jerusalem was no doubt a small city, but the ultra-minimalistic views expressed by Zwickel and Finkelstein should be rejected along with their implications for the study of the Biblical, archaeological and historical research of the Persian period.

பொ.மு 400ல் ஜெருசலேம் மற்றும் அருகில் வேறொரு ஊரும் சேர்ந்தே 1000 மக்களே வாழ்ந்தனர்.

PAGAN SINNERS ரோமர் 9: யூதரல்லாதவர்கள் தேவன் முன் நீதிமான்களாக விளங்க முயற்சி செய்யவில்லை.

கலாத்தியர் 2: 15 யூதர் அல்லாதவர்களைப் போன்றும், பாவிகளைப் போன்றும் யூதர்களாகிய நாம் பிறக்கவில்லை. நாம் யூதர்களைப் போலப் பிறந்தோம்.

[i] சங்கீத: 48 :1 ஆண்டவர் மாண்பு மிக்கவர்; நம் கடவுளின் நகரில், அவரது திருமலையில் மிகுந்த புகழுக்கு உரியவர்.2 அழகும் உயரமுமாய் தொலை வடக்கில் திகழும் சீயோன் மலை அனைத்து உலகிற்கும் மகிழ்ச்சியால் இலங்குகின்றது; மாவேந்தரின் நகரும் அதுவே. 3 அதன் அரண்மனைகளில் கடவுள் வீற்றிருந்து, தம்மையே அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார்.  4இதோ! அரசர் அனைவரும் ஒன்று கூடினர்; அணிவகுத்து ஒன்றாக வந்தனர்

ஏசாயா 52:1 விழித்தெழு, விழித்தெழு, சீயோனே, உன் ஆற்றலை அணிந்து கொள்: திரு நகர் எருசலேமே, உன் அழகுறு ஆடைகளை அணிந்துகொள்: விருத்தசேதனம் செய்யாதவனும் தீட்டுப்பட்டவனும் உன்னிடையே இனி வரவேமாட்டான்.2 சிறைப்பட்ட எருசலேமே, புழுதியைத் தட்டிவிட்டு எழுந்து நில்: அடிமையாக்கப்பட்ட மகள் சீயோனே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு.

[ii] F.F.Bruce The Real Jesus Page- 81

[iii] ஏசாயா 52:1 விழித்தெழு, விழித்தெழு, சீயோனே, உன் ஆற்றலை அணிந்து கொள்: திருநகர் எருசலேமே, உன் அழகுறு ஆடைகளை அணிந்துகொள்: விருத்தசேதனம் செய்யாதவனும் தீட்டுப்பட்டவனும் உன்னிடையே இனி வரவேமாட்டான்.2 சிறைப்பட்ட எருசலேமே, புழுதியைத் தட்டிவிட்டு எழுந்து நில்: அடிமையாக்கப்பட்ட மகள் சீயோனே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு.

[iv]ரோமர் 11: 26 இவ்வாறு இஸ்ரவேலர்கள் அனைவரும் காப்பாற்றப்படுவர்.26..“மீட்பர் சீயோனிலிருந்து வருவார். யாக்கோபின் குடும்பத்திலிருந்து தீமைகளை அகற்றுவார்.27 நான் அவர்களது பாவங்களை விலக்கும் போது நான் இந்த உடன்படிக்கையைச் செய்துகொள்வேன்”  என்று எழுதப் பட்டிருக்கிறது.

[v] யோவான் 4:20,22

[vi] உபாகமம் 6:  11 நீங்கள் வைத்திராத சிறந்த நல்ல பொருட்கள் பலவற்றைக்கொண்ட வீடுகளை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் இதுவரைத் தோண்டியிருக்காத கிணறுகளைத் தருவார். நீங்கள் இதுவரைப் பயிரிடாத திராட்சைத் தோட்டங்கள், ஒலிவ மரங்கள் போன்றவற்றை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் திருப்தியாக உண்ணலாம்.

[vii] 7: 1 “உங்கள் விருப்பத்திற்கேற்ப சுதந்திரமாக வாழப்போகின்ற இந்த தேசத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை வழிநடத்திச் செல்வார். உங்களுக்காக உங்களைவிடப் பெரியவர்களும், பலசாலிகளுமான ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய ஏழு நாட்டினர்களையும் உங்களுக்கு முன்பாகவே துரத்துவார். உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்த ஏழு நாட்டினரையும் உங்களுக்குக் கீழே கட்டுப்பட வைப்பார். அவர்களை நீங்கள் தோற்கடிப்பீர்கள். அவர்களை முழுவதுமாக நீங்கள் அழித்துவிட வேண்டும். அவர்களிடம் எவ்வித ஒப்பந்தமும் செய்யாதீர்கள். அவர்களிடம் இரக்கம் காட்டாதீர்கள். அவர்களில் எவரையும் மணந்துகொள்ளாதீர்கள். நீங்கள் மட்டுமின்றி உங்கள் மகன்களையோ மகள்களையோ அந்த ஜனங்களைச் சார்ந்தவர்களில் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்கக் கூடாது….

16 உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உதவியோடு தோற்கடித்த எல்லா எதிரிகளையும் அழித்துவிட வேண்டும். அவர்களுக்காக வருத்தப்படாதீர்கள். 17 “‘நம்மைவிட நம் எதிரிகள் பெரியவர்கள். நாம் எப்படி அவர்களைத் துரத்திவிடுவது’ என்று உங்கள் மனதிற்குள் நீங்களே சொல்லிக்கொள்ளாதீர்கள். 18 நீங்கள் அவர்களைக் கண்டு சிறிதும் பயப்படத் தேவையில்லை.

உபாகமம் 9: “இஸ்ரவேல் ஜனங்களே கவனியுங்கள்! நீங்கள் இன்று யோர்தான் நதியைக் கடந்து செல்லப் போகிறீர்கள். அந்த நிலத்தில் உங்களைவிடப் பெரிய பலம் வாய்ந்த உங்களின் எதிரிகளை வெளியே துரத்துவீர்கள். அவர்களது நகரங்கள் வானத்தைத் தொடும் உயர்ந்த மதில்களைக் கொண்ட பெரிய நகரங்களாகும்! அங்குள்ள ஜனங்கள் உயரமாகவும் பருமனாகவும் இருக்கிறார்கள். அவர்கள் ஏனாக்கின் வம்சத்தினர். நீங்கள் அவர்களைப்பற்றி அறிந்திருக்கிறீர்கள். ‘ஏனாக்கியர்களை எவராலும் எதிர்த்து வெல்லமுடியாது’ என்று நம் ஒற்றர்கள் கூறியதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

யாத்திராகமம் 34:  11 நான் இன்றைக்கு உங்களுக்கு இடும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். உங்கள் நாட்டிலிருந்து உங்கள் பகைவர்கள் போகும்படி செய்வேன். எமோரியரையும், கானானியரையும், ஏத்தியரையும், பெரிசியரையும், ஏவியரையும், எபூசியரையும் வெளியேற்றுவேன்.

[viii] யோசுவா 10 :1அக்காலத்தில் அதோனிசேதேக் எருசலேமின் அரசனாக இருந்தான். யோசுவா ஆயீ நகரைத் தோற்கடித்து முற்றிலும் அழித்துவிட்டான் என்ற செய்தியை அந்த அரசன் அறிந்தான். எரிகோவிற்கும் அதன் அரசனுக்கும் யோசுவா அவ்வாறே செய்தான் என்பதையும் அவன் தெரிந்து கொண்டான். கிபியோனியர் இஸ்ரவேலரோடு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டதையும் அவன் அறிந்திருந்தான். அந்த ஜனங்கள் எருசலேமுக்கு வெகு அருகாமையில் வாழ்ந்தனர். எனவே அதோனிசேதேக்கும் அவன் ஜனங்களும் மிகவும் பயந்தனர். கிபியோன் ஆயீயைப் போன்ற சிறிய நகரமன்று. கிபியோன் ஒரு பெரிய பலமான நாடு. அங்கிருந்த ஆண்கள் அனைவரும் சிறந்த போர் வீரர்களாக இருந்தார்கள். எருசலேமின் அரசனாகிய, அதோனிசேதேக், எபிரோனின் அரசனாகிய, ஓகாமுடனும் யர்மூத்தின் அரசனாகிய பீராமுடனும், லாகீசின் அரசனாகிய யப்பியாவுடனும், எக்லோனின் அரசனாகிய தெபீருடனும் பேச்சு வார்த்தை நடத்தினான். எருசலேமின் அரசன் இவர்களிடம், “என்னோடு வந்து கிபியோனைத் தாக்குவதற்கு உதவுங்கள். யோசுவாவோடும் இஸ்ரவேல் ஜனங்களோடும் கிபியோனியர் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துள்ளனர்!” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். 5 இந்த ஐந்து எமோரிய அரசர்களும் படை திரட்டினர். (அவர்கள் எருசலேம், எப்ரோன், யர்மூத், லாகீசு, எக்லோன் ஆகிய நாட்டு மன்னர்கள் ஆவார்கள்.) அப்படைகள் கிபியோனை நோக்கிச் சென்று நகரைச் சூழ்ந்து கொண்டு, போர் செய்ய ஆரம்பித்தன. கிபியோன் நகர ஜனங்கள் கில்காலில் முகாமிட்டுத் தங்கி இருந்த யோசுவாவிற்குச் செய்தியனுப்பினார்கள்: அதில், “நாங்கள் உமது பணியாட்கள்! எங்களைக் கைவிட்டு விடாதீர்கள். வந்து எங்களுக்கு உதவுங்கள்! விரைந்து வாருங்கள், எங்களைக் காப்பாற்றுங்கள்! மலை நாட்டின் எமோரிய அரசர்கள் எல்லோரும் எங்களை எதிர்த்துப் போரிடுவதற்கு அவர்கள் படைகளைக் கொண்டுவந்துள்ளனர்” என்று இருந்தது. எனவே யோசுவா தனது படையோடு கில்காலிலிருந்து புறப்பட்டான். யோசுவாவின் சிறந்த படை வீரர்கள் அவனோடிருந்தனர். கர்த்தர் யோசுவாவிடம், “அப்படைகளைக் கண்டு அஞ்சாதீர்கள். நீங்கள் அவர்களைத் தோற்கடிக்கச் செய்வேன். அப்படைகளில் ஒன்றும் உங்களைத் தோற்கடிக்க இயலாது” என்றார். யோசுவாவும், அவனது படையும் கிபியோனுக்கு இரவு முழுவதும் அணிவகுத்துச் சென்றனர். யோசுவா வருவதைப் பகைவர்கள் அறியவில்லை. எனவே அவன் திடீரென்று தாக்கியபோது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.10 இஸ்ரவேலர் தாக்கியபோது அவர்கள் மிகுந்த குழப்பமடையும்படியாக கர்த்தர் செய்தார். எனவே இஸ்ரவேலர் அவர்களைத் தோற்கடித்துப் பெரும் வெற்றி பெற்றனர். பெத்தொரோனுக்கு போகிற வழிவரைக்கும் இஸ்ரவேலர் பகைவர்களைக் கிபியோனிலிருந்து துரத்தினர். அசெக்கா, மக்கெதா வரைக்கும் இஸ்ரவேலர் அவர்களைக் கொன்றனர். 11 அப்போது இஸ்ரவேல் படையினர் பகைவர்களை பெத்தொரோனிலிருந்து அசெக்கா வரைக்குமுள்ள வழியில் துரத்தினார்கள். அப்போது, கர்த்தர் வானத்திலிருந்து பெருங்கற்கள் விழும்படியாகச் செய்தார். அப்பெருங்கற்களால் பகைவர்கள் பலர் மரித்தனர். இஸ்ரவேல் வீரர்களின் வாளால் அழிக்கப்பட்டவர்களைக் காட்டிலும் கற்களால் கொல்லப்பட்டோரே அதிகம்.

[ix] நியாயாதிபதிகள் 1 :5பேசேக்கில் யூதா ஜனங்கள் பேசேக்கின் அரசனைக் கண்டு, அவனோடு போரிட்டார்கள். யூதா ஜனங்கள் கானானியரையும் பெரிசியரையும் வென்றார்கள்.பேசேக்கின் அரசன் தப்பிச்செல்ல முயன்றான். ஆனால் யூதா ஜனங்கள் அவனைத் துரத்திப் பிடித்தனர். அவனைப் பிடித்தபின் அவனது கை, கால் பெருவிரல்களைத் துண்டித்தனர். அப்போது பெசேக்கின் அரசன், “70 அரசர்களின் கை, கால் பெருவிரல்களை நான் துண்டித்தேன். எனது மேசையிலிருந்து விழுந்த உணவுத் துணிக்கைகளை அந்த அரசர்கள் புசித்தார்கள். நான் அந்த அரசர்களுக்குச் செய்தவற்றிற்கான தண்டனையை தேவன் எனக்குத் தந்தார்” என்றான். யூதா மனிதர்கள் பேசேக்கின் அரசனை எருசலேமிற்குக் கொண்டு சென்றார்கள். அவன் அங்கு மரித்தான்.யூதா மனிதர்கள் எருசேலேமுக்கு எதிராகப் போரிட்டு அதனைப் பிடித்தார்கள். எருசலேம் ஜனங்களைக் கொல்ல யூதா மனிதர்கள் தங்கள் வாள்களைப் பயன்படுத்தினார்கள். பின்பு நகரை எரித்தார்கள். பின்னர் யூதா மனிதர்கள் கானானியர் சிலரை எதிர்த்துப் போரிடச் சென்றார்கள். அந்தக் கானானியர்கள் பாலைவனப்பகுதியிலும், மலை நாட்டிலும், மேற்கு மலையடிவாரங்களிலும் வசித்தார்கள்.10 பின்பு யூதா மனிதர்கள் எபிரோன் நகரில் வாழ்ந்த கானானியரோடு போரிடச் சென்றார்கள் (எபிரோன், ”கீரியாத்அர்பா” என்றும் அழைக்கப்பட்டது.) சேசாய், அகிமான், தல்மாய் ஆகிய மனிதர்களையும் யூதாவின் ஜனங்கள் தோற்கடித்தனர்.

[x] 2 2 சாமுவேல் 5:தாவீது அரசனும் அவனது வீரர்களும் எருசலேமில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற எபூசியரை எதிர்த்துப் போரிடுவதற்குச் சென்றனர். எபூசியர்கள் தாவீதிடம், “எங்கள் நகரத்திற்குள் உங்களால் வரமுடியாது.  எங்களில் குருடர்களும் முடவர்களுங்கூட உங்களைத் தடுத்து நிறுத்தமுடியும்” என்றனர். (தாவீது, அவர்கள் நகரத்திற்குள் நுழையமாட்டான் என்று அவர்கள் நினைத்ததால் இவ்வாறு கூறினார்கள். ஆனால் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான். இக்கோட்டை பின்பு தாவீதின் நகரமாயிற்று.)

[xi]  1 நாளாகமம் 22: 14 “சாலொமோன், நான் கடினமான வேலை செய்து கர்த்தருக்கு ஆலயம் கட்டதிட்டமிட்டேன். நான் 3,750 டன் தங்கம் கொடுத்திருக்கிறேன். 37,500 டன் வெள்ளி கொடுத்திருக்கிறேன். நிறுத்துபார்க்க முடியாத அளவிற்கு வெண்கலமும் இரும்பும் கொடுத்திருக்கிறேன். மரமும் கற்களும் கொடுத்திருக்கிறேன். சாலொமோன், உன்னால் மேலும் சேர்க்க முடியும். 15 உன்னிடம் ஏராளமான கல்தச்சர்களும் மரத்தச்சர்களும் உள்ளனர். எல்லா வேலைகளையும் செய்யும் திறமை உடையவர்களும் உனக்கு இருக்கின்றனர். 16 அவர்கள் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு போன்ற வேலை செய்வதில் வல்லவர்கள். எண்ணிபார்க்க முடியாத அளவிற்கு அதிகமாக உள்ளனர். இப்போதே வேலையைத் தொடங்கு. கர்த்தர் உன்னோடு இருக்கட்டும்” என்றான்.

[xii] 1 இராஜாக்கள் 10:21 அரசனின் பானபாத்திரங்கள் பொன்னால் செய்யப்பட்டிருந்தது. “லீபனோனின் காடு” எனும் மாளிகை பொருட்கள் எல்லாம் பசும்பொன்னால் செய்யப்பட்டிருந்தன. எதுவும் வெள்ளியால் செய்யப்படவில்லை. காரணம் அவனது காலத்தில் வெள்ளி ஒரு பொருட்டாக மதிக்கப்படவில்லை!

27 சாலொமோன் இஸ்ரவேலைச் செல்வம் செழிக்கச் செய்தான். அவன் நாட்டில் வெள்ளியானது பாறைகளைப்போல பொதுவாகக்

[xiii] 2 மக்கபேயர் 6:2 மேலும் எருசலேமில் இருந்த கோவிலைத் தீட்டுப்படுத்தி அதற்கு “ஒலிம்பு மலைச் சேயுவின் கோவில்” எனப் பெயரிடவும், கெரிசிமில் வாழ்ந்த மக்கள் வேண்டிக் கொண்டதற்கு இணங்க அங்கு இருந்த கோவிலை, “அன்னியர்களின் நண்பர் சேயுவின் கோவில்” என அழைக்கவும் அவனைப் பணித்தான்.

[xiv] Josh Mcdowell – He walked among us; Page- 245

[xv] யோவான்4: 20 . சமாரியப் பெண் இயேசுவிடம்-  நமது முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால்  யூதராகிய நீங்களோ, எருசலேம்தான் வழிபாட்டுக்குரிய இடம் என்று கூறுகிறீர்கள் ….. 22 இயேசு – யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் யூதர்கள் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது.

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக