இயேசு யார்? கிறிஸ்துயார்? முன்னுரை

இயேசு கிறிஸ்து எனப்படும் உலகில் மிக அதிகமான செலவில்  பெரும்பாலான மொழிகளில் மொழிபெயர்த்து  ஆண்டிற்கு பல்லாயிரம் கோட்கள் செலவில்  பரப்பப்படும் கிறிஸ்துவப் புராணக் கதை நாயகன்.  இஸ்ரேலில், பொ. ஆ. முதல் நூற்றாண்டில் இஸ்ரேல் ரோமன் ஆட்சிக்கு அடிமைப்பட்டு இருந்த போது வாழ்ந்ததாகவும், தன்னை யூதர்களின் கிறிஸ்து- ராஜா என்பதாக இயக்கம் நடத்திட ரோம் ஆட்சியின் கவர்னர் பிலாத்து கைது செய்திட மரண தண்டனையில் இறந்தார். இவர் பற்றி இவருடைய சம காலத்தவர் யாரும், நேரடியாக பார்த்து பழகியோர் ஏதும் எழுதிவிட்டு செல்லவில்லை. அவர் மரணத்திற்கு 40 வருடம் தொடங்கி அடுத்த நூற்றாண்டில் மதம் பரப்ப புனையப்பட்டவை புதிய ஏற்பாடு.

 

இயேசு -ஜீஸஸ், ஈசா என்று பலவாறாக அழைக்கப்படும் கிறித்தவ மதத்தின் கடவுளாக(மகன்) கருதப்படும், இவரின் வாழ்க்கை கதை கிறித்தவர்களின் சமயத் தொன்மமான  புதிய ஏற்பாட்டின் சுவிஷேசங்களான மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும்  ஜான் (யோவான்) ஆகியவற்றில் குறிப்பிடப்படுகிறது. சுவிஷேசக் கதைகளில் இவர் கன்னித்தாய்க்கு பிறந்த்தாகவும்,பல அற்புதங்கள் செய்ததாகவும், ரோமன் கவர்னரால் சிலுவையில் அறைப்பட்டு இறந்தார், ஆனால் மூன்று நாட்கள் கழித்து உயிரோடு திரும்பினார் என்றெல்லாம் கூறபடுகிறது. இஸ்லாமியர்களின் தொன்மமான குரானின் கதைகளிலும் இவர் ஈசா என்ற பெயரில் கன்னித்தாயின் மகன்,அற்புதஙகள் இங்கும் கூறப்படுகிறது.ஆனால் இவர் ஒரு இறைத்தூதர் மட்டுமே. கடவுளின் அவதாரமில்லை.

மின்னணுப் புரட்சியும் கைப்பேசியில் வலையுலகமும் உலகை ஒரு சிறு கிராமமாக சுருக்கிவிட்டது. உலகின் பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்களின் பல முக்கிய பதவிகளில் இந்தியர் உள்ளனர். நம்மிடையேயும் பல்வேறு சமய மக்கள் வாழ்கின்றனர். தங்கள் சமயமே உயர்ந்தது என திணிக்கபட்ட புனையலை கேட்டு அதே ஊகத்தில் பாரத இறை வரலாற்றை -வழிபாட்டையை அறியாது பேசுவோர் காண்கிறோம்.

சமுதாயத்தில் நல்லிணக்கம் தோன்ற அனைத்து மக்க்ளிடையே உரையாடல்கள் அவசியம், அந்த நிலையில் பிற சமயங்களைப் பற்றிய வரலாற்றுப் புரிதல் அவசியம். கிறிஸ்துவம் பற்றிய தற்போதைய பன்னாட்டு பல்கலைக்கழக ஆய்வுகளின் இன்றைய நிலையினை-உண்மைகளை இந்நூலில் தருகிறோம். மதம் பரப்பல் என்பது கிறிஸ்துவத்தில் ஒரு வர்த்தகத் தொழில் என்ற வழியில் பணம் புயல் மாதிரி புகுந்து விளையாடுகிறது. ஒரு நாட்டுக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட்டை விட இந்த மதநிறுவனங்களுக்குள் புழங்கும் பணம் மிகஅதிகமாக உள்ளது.

கிறிஸ்துவ சமயத்தின் தொன்மக் கதைகளைப் பற்றிய ஆய்வுகள் 1970க்குப் பின்பாக, தொல்லியல் ஆய்வுகளில் உண்மை அடிப்படையில் என்ற நோக்கம் மேலோங்கத் தொடங்கியது. அமெரிக்க ஐரோப்பா நாடுகளில் எழும்பிய கருத்துச் சுதந்திரம், விஞ்ஞானப் புரட்சி, சர்ச் உண்மையினைத் தடுக்கும்  சக்தி குறைந்திட பல்கலைக் கழகங்களின் ஆய்வ்களும் மேம்படத் தொடங்கின. ஆராதனைப் பார்வை நீங்கி வரலாறு எனக் கொண்டு எழுந்த தொல்லியல் அகழ்வாய்வுகள் விவிலியத்தின் முற்பகுதியான எபிரேய பைபிளினை அனைத்தும் பொய்[i] எனக் காட்டிட, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பல்கலைக் கழக தொல்லியதுறை இயக்குனர்  இஸ்ரேல் பின்கல்ஸ்டீன் தன் நூலின்(The Bible Unearthed) முன்னுரையில் கூறுவது[ii]

//விவிலிய உலகம் இஸ்ரேல் ஒரு மிகச் சிறிய வளர்ச்சியற்ற ஒரு சாதாரண பகுதியில் மக்கள் எதிர்காலம் பற்றிய பயங்கள் வருமை, போர் , வியாதிகள், அநியாயங்கள், பஞ்சம் போன்றவையில் தவித்த மக்கள் பகுதி தான், பைபிள் கதைகள்கூறப்பட்டுள்ள புனையல்கள்ஆபிரகாமை கடவுள் தேந்தெடுத்தார், பின் பாபிலோனிலிருந்து அவர் கானான் வந்தார் என்பது, எகிப்திலிருந்து மோசே மூலம் மக்களை அடிமைப்– பாட்டிலிருந்து மீட்டு, பின் யூதேயாஇஸ்ரேல் நாடுகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் இவை ஏதும் ஒரு இறை வெளிப்பாடு இல்லை, மனிதச் சிந்தனையின் கற்பனை வளம்  மிக்கக் கதைகள்.//

அமெரிக்க தொல்லியல் பேராசிரியர் வில்லியம் டேவர்[iii] கூறுவது கடந்த 150 ஆண்டுகளில் எகிப்தில்  எபிரேயர்கள் வாழ்ந்தார்கள், பாலைவனத்தில் 40 வருடம் அலைந்து இஸ்ரேல் வந்தனர் என்பதற்கு ஒரு சிறு ஆதாரமும் கிடைக்கவில்லை, பைபிள் கதைகளைக் காப்பாற்ற பல அறிஞர்களும் பல்வேறு ஊகக் கோட்பாடு கூறு மழுப்பினர்.

உலகின் மூன்று பெருமதங்களில் ஒன்றாய் விளங்கும் கிறிஸ்துவத்தின் துவக்கம் மிகவும் மெதுவானது. கிறிஸ்துவ சமயத் தொடக்க வளர்ச்சியினை ஆய்வு செய்த நூல்கள், அதனை சர்ச் வரலாற்றாசிரியர்களின் விமர்சன அடிப்படையில் காணும்போது, ஏசு பொகா 30 வாக்கில் இறந்தார் எனில், 40 வாக்கில் 1000 பேர் சர்ச் உறுப்பினராய் கிறிஸ்துவரானர்,[iv] இது ஆண்டிற்கு 2.5% எனும் வேகத்தில் வளர்ந்தது.  கிறிஸ்துவ சர்ச்சின் ரோம் ஆட்சியின் கீழிருந்த 6 கோடி மக்களுள் பத்தாயிரம் என்ற நிலை எட்ட ஏசுவின் மரணத்திற்கு 100 ஆண்டு பின்பு தான் ஆனது, ஆனால் 10 லட்சம் பேர் எனும் நிலையில் 320 வாக்கில் இருந்த கிறிஸ்துவ மக்கல் தொகை, ரோமன் ஆட்சியில் அதிகார அங்கிகாரம் பெற்றிட அடுத்த 50 ஆண்டினும் 5.5 கோடியைத் தாண்டியது. [v]கிறிஸ்துவம் பெருமதமாய் உரு பெறக் காரணம் ரோமன் ஆட்சியின் ஆதரவே அன்றி வரலாற்று ஏசுவோ, அதிசயங்களோ இல்லை என்பது வரலாற்று உண்மை.

இயேசு கதைகளை சொல்லும் புதிய ஏற்பாடு எனும் 27 நூல் தொகுப்பு, மிகப் பழைய ஏடுகள்  என்பவை ஒரு சிறு புத்தகம் முழுதும் எனில் கூட 3ம் நூற்றாண்டு இறுதி அல்லது பிற்பாடு தான், புதிய ஏற்பாடு முழுமைக்கும் எனில் 5-6ம் நூற்றாண்டு ஏடுகள் அதிலும் பிற்கால திருத்தங்கள்என உள்ளது,  உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் மாற்றாக வேறு இரு சொற்களாவது உள்ளது, எனவே உள்ள 6000 கிரேக்க ஏடுகள் எவ்விதத்திலும் நம்மை மூல ஏட்டிற்கு அழைத்துச் செல்ல இயலாது.[vi]

எபிரேய மொழி மொழிரீதியில் வளர்ச்சியற்றது,  உயிர் எழுத்துக்கள், ஏசுவிற்கு 800 ஆண்டு  பின்பு தான் உருவாயிற்று, உயிர் எழுத்து சேர்த்துஎழுதப்பட்ட மெசொடரிக் [vii] 10ம் நூற்றான்டு ஏடு தான் நம்மிடம் உள்ள எபிரேய பழைய ஏற்பாடு ஏடுகள். (பழைய ஏடுகள் அழிக்கப்பட நம்மிடம் பழைய ஏடுகளே கிடையாது) 1947ல்  கிடைத்த  சாக்கடல் சுருள்கள் ஏசுவிற்கு ஒரு நூற்றாண்டு முன் தான் இவற்றை மாற்றி இக்கதைகள் இன்றைய  வடிவில் இயற்றப்பட்டன என நிருபிக்கிறது.

சாக்கடல் சுருள்கள்: [viii]மேற்குக் கரையோரமுள்ள சாக்கடல் அருகே 11 சிறு குகைகளில்  1946 – 56 இடையே பல பழைய சுவடி சுருள்கள் கிடைத்தன,இவற்றினை 1991  வரை சர்ச் கட்டுப்பட்டில் கொண்டது, பின் அப்படிகள் அச்சில் வந்தன.

நாக் அம்மாடி[ix] எனும் எகிப்து அருகிலுள்ள இடத்தில் 1945ல் பல காபிடிக் மொழி,  கிரேக்க ஏடுகள் கிடைத்தன, இவை 2-3ம்  நூற்றாண்டு கிறிஸ்துவவிவிலிய நூல்கள்.  ஞான மார்க்க சுவிசேஷங்கள், புதிய ஏற்பாட்டில் சேர்க்கப்படாதவை, ரோமன் சர்ச் கொடுமைக்கு  பயந்து புதைக்கப்பட்டாது கிடைத்தது 1975ல் அச்சில் வந்தது.பைபிள்-(விவிலியம்) இவை முழுவதுமாக ஆன்மிகக் கருத்துக்களோ இறையியற் நோக்கு கொண்டது அல்ல, பெரும்பாலும், அரசியல் -ஆக்கிரமிப்புபோன்றவற்றை இறைவன் பெயரில் மிகப்பிற்காலத்தில் அரசியல் நோக்கில் புனையப் பட்டவையே ஆகும்.

யூத கிறிஸ்துவ தொன்மக் கதைகளில் சற்றும் வரலாற்று உண்மைகள் கிடையாது என்பது மிகத் தெளிவாய் தொல்லியல் ஆய்வுகள், பைபிளியல் ஏடுகள் நூலின் அமைப்பு ஆய்வுகள், மிகத் தெளிவாய் நிருபித்துவிட்டது. பைபிள் முழுமையும் பிற்காலத்தில் இஸ்ரேலின் ஆட்சி உரிமை எங்களுக்கு எனக் காட்ட மனிதக் கரங்களால் புனையப்பட்ட தொன்மக் கதைகளே.

வரலாற்று ரீதியில் இயேசு எனும் கிறிஸ்துவ கதை நாயகர் வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரம் ஏதும் கிடையாது, இஸ்ரேல் – ரோம் நாடுகளில் முதல் நூற்றாண்டில் வாழ்ந்து நூல்கள் எழுதிய பல ஆசிரியர் எவரும் ஏசுபற்றி எழுதவில்லை. ஆயினும் பிற்கால சர்ச், இறந்த ஆசிரியர் சிலர் நூல்களில் நுழைத்த இடைச்செருகள் இன்று ஆய்வாளர்களால் நிராகரிக்கப்பட்டன.

இந்நூலில் நாம் வரலாற்றை பன்னாட்டு பல்கலை கழகங்கள் குறிக்கும்படிக்கு பொகா – பொமு  (பொதுக் காலம் & பொதுக்காலத்திற்கு முன்), என்றே (பழைய தவறான கிபி-கிமு நிறுத்தப் பட்டது, விவிலியக் கதைகளிலேயே ஏசு பிறந்த – இறந்த வருடங்களில் குழப்பம் உண்டு) பயன்படுத்துகிறோம். நாம் பெரும்பாலும் தமிழ் ERV அல்லது கத்தோலிக்க இன்றைய தமிழ் மொழி பெயர்ப்பை உபயோகித்தாலும் தேவை எனில் மூல எபிரேய- கிரேக்க சொற்களின் சரியான பொருளை எடுத்து கொண்டுள்ளோம்.

சமயங்களை பின்பற்றுவோர் தன் மதத்தின் மீது அதீதப் பற்று வைத்தல் நடைமுறையே. 100 கோடிக்கும் அதிகமானோர் பின்பற்றும் கிறிஸ்துவ சமய சர்ச், விவிலியக் கதைகளை வரலாறு என்பதை வாடிக்கையாய் பரப்புகிறது. மேம்போக்கான ஆய்வு முடிவுகளை 60கள் வரை பரப்பப் பட்ட தவறான ஆதாரங்கள் பெரும் ஆரவாரத்தோடு இன்றும் விளம்பரப் படுத்தப் படுகிறது.

வரலாற்று ஆய்வு என்பது தொன்மக் கதைகள் அல்ல, , புதை பொருள் தொல்லியல் ஆய்வுத் தரவுகள், கல்வெட்டு போன்ற சமகால எழுத்துக்கள், ஓலைச்சுவடி, செப்புப்பட்டயம்  மதம் பரப்ப அன்றி நடுநிலையாளர் எழுதியவை போன்றவையே. இவற்றின் அடிப்படையில் இன்று ஐரோப்பா -அமெரிக்க பல்கலைக் கழக பேராசிரியர்களின் பாட நூல்களின் அடிப்படையிலும், பைபிளியல் மழுப்பலாளர் நூல்கள் அடிப்படையிலும் இந்நுல் உண்மைகளைத் தருகின்றது. கிறிஸ்துவம் பற்றிய தற்போதைய பன்னாட்டு பல்கலைக்கழக ஆய்வுகளின் இன்றைய நிலையினை-உண்மைகளை இந்நூலில் தருகிறோம்.

ஹிந்துக்கள் இனி பிற சமய மக்களோடு உரையாடல் செய்யும்போது கிறிஸ்துவம் பற்றிய ஒரு கையேடாக பயன்படுத்தப்படவும் வேண்டும்.

[i] Prof.Thomas L. Thompson who submitted his first thesis

[ii] The Bible Unearthed  //The world in which the Bible was created was not a mythic realm of great cities and saintly heroes,but a tiny, down-to-earth kingdom where people struggled for their future against the all-too-human fears of war, poverty, injustice, disease, famine, and drought. The historical saga contained in the Bible—from Abraham’s encounter with God and his journey to Canaan, to Moses’ deliverance of the children of Israel from bondage, to the rise and fall of the kingdoms of Israel and Judah—was not a miraculous revelation, but a brilliant product of the human imagination.//

[iii] Dever, William G. (2001), What Did the Biblical Writers Know and When Did They Know It? What Archaeology Can Tell Us about the Reality of Ancient Israel As archaeological evidence mounted, however, in the heyday of “biblical archaeology” between the 1930s and the 1950s, the question of Israelite origins grew more intractable. To everyone’sfrustration, new data brought more questions than answers. In fact, no one had ever found anyarchaeological evidence for the Exodus from Egypt. But in order to try to reconstruct the conquest andsettlement of Canaan, three competing theories or “models” eventually emerged, to which we shall turn presently.

[iv] Rodney Stark, The Rise of Christianity (1996)  ; W.V. Harris, ed., The Spread of Christianity in the First Four Centuries: Essays in Explanation (2005).’ Ramsey MacMullen, Christianizing the Roman Empire

Bruce Malina, Book Review of Rodney Stark’s The Rise of Christianity, in The Catholic Biblical Quarterly 59 (1997): pp. 593-595.-220 bishops (so Henry Chadwick) attended the Council of Nicea called by Constantine in A.D. 325. These bishops functioned in a face-to-face society. Now in a face-to-face society the maximum number of persons with whom one can interact is ca. 4,000 (so the anthropologist, Jeremy Boissevain); hence, “scientifically” speaking (that is, mathematically), the number of Christians at the time of the Council of Nicea was ca. 880,000, the result of a growth rate of ca. 2.5 percent per year [hence Stark] postulates a growth rate that is exaggeratedly high.

[v] Chamber’s Encyclopedia Vol-3 P-531. In 31E, the most severe of all persecutions was ended when emperor Constantine became Christian. The big minority swelled into big majority and 80 years later it had become practically illegal for a citizen of Roman empire not to be Christian. One hundred years after that the words Roman and Christians seemsto have been interchangeable.

[vi] Bart Ehrman –many books and Helmet Koester & https://en.wikipedia.org/wiki/Biblical_manuscript

[vii] Geza Vermes -The Story of the Scrolls &

https://en.wikipedia.org/wiki/Masoretic_Text

[viii] https://en.wikipedia.org/wiki/Dead_Sea_Scrolls

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக